கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலையில் டிசம்பர் 8 முதல் 16 ஆம் தேதி வரை 156 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவுவிட்டுள்ளார்.
கார்த்திகை தீப விழாவுக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்க 22 தனியார் பஸ்கள், 172 பள்ளி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 கட்டணத்தில் 36 சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தெற்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் டிச.10க்குப் பின் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாண்டிச்சேரி-விழுப்புரம் சாலையில் NH-45A இல் 100,000 சதுர அடியில் கிடங்கு குத்தகைக்கு உள்ளது.
கிடங்கு விவரங்கள்:
– நிலம்: 3.7 ஏக்கர்
– அருகாமையில்: FCI குடோன்கள் & ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் உள்ளது.
– அம்சங்கள்: 10மீ உயரம், கப்பல்துறை சமன், விசாலமான பார்கிங், தீ பாதுகாப்பு, 24/7 பாதுகாப்பு மற்றும் நம்பகமான நிலத்தடி நீர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.