10,109 சிறப்புப் பேருந்துகள் கார்த்திகை தீபத் திருவிழா, பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 1,982 சிறப்புப் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலை கோயிலுக்கு 8,127 பேருந்துகள் வரும் 12ம் தேதியில் இருந்து 15ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான நேற்று (08.12.2024) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The cost of gold has increased to Rs. 120 per sovereign on Monday Morning (December 09, 2024). The cost of the gold rate has increased to Rs. 15 per gram.
The gold rate has increased and one sovereign was worth Rs. 57040.00 and a gram was Rs. 7130.00.
The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7777.00.
A kilo of silver is priced at Rs. 100,000.00 and a gram is worth Rs. 100.00.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (07.12.2024) இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.