மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.
பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளார்.