திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான நேற்று (07.12.2024) இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.
கார்த்திகை தீப விழாவுக்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 15 பஸ் நிறுத்துமிடங்கள் அமைக்கப்படுகின்றன. பஸ் நிலையங்களிலிருந்து கிரிவல பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்க 22 தனியார் பஸ்கள், 172 பள்ளி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.10 கட்டணத்தில் 36 சிற்றுந்துகளும் இயக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (07.12.2024) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (06.12.2024) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (06.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (05.12.2024) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.