திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2024, இன்று (17.12.2024) சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் சிறப்பாக நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீப விழாவில் நேற்று (15.12.2024) இரவு தெப்பல் உற்சவத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் மகாதீபம் கடந்த 13 – ஆம் தேதி ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று (14.12.2024 ) இரவு சந்திரசேகரர் அலங்காரம் செய்யப்பட்டு அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று (12.12.2024) காலை விநாயகர், சந்திரசேகரர் புருஷா முனி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.