மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னை, திருவள்ளூருக்கு விரைந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த 4 மாவட்டங்கள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் காரணமாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் (06.12.2023) நிறைவு பெறுகிறது. நாளை (07.12.2023) காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.