வங்கி பரிவர்த்தனை கண்காணிப்பு ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தொடர்பான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நேற்று (16.03.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் திரு மா. சிவசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு பாஸ்கரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு சசிகுமார், தேர்தல் வட்டாட்சியர் திரு ரமேஷ் மற்றும் பல்வேறு வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டு, தேர்தல் காலத்தில் பணப் பரிவர்த்தனைகளை திறம்பட கண்காணிக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Education