திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி அன்னதான விண்ணப்பங்கள் தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அன்னதானம் செய்ய விரும்பும் பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.

செங்கம் சாலை, பழைய மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் உணவு பாதுகாப்பு துறை, மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தில் 17.04.2026 முதல் 26.04.2026 வரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து தேவையான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.

Education