2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில், பஞ்சமூர்த்திகளின் மகா தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை இழுத்து சாமி தரிசனம் செய்ய உள்ளனர்.

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் தீபத் திருவிழா ஆறாம் நாள், காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதியுலா வர இருக்கின்றனர்.

இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெறும்.

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வுகள்:

காலை நிகழ்வு:
விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும் திருவீதிகளில் வலம் வர உள்ளனர்.

இரவு நிகழ்வு:
இரவு நேரத்தில் பெரிய நாயகர் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்திலும், உண்ணாமுலை அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் மாடவீதிகளில் வீதியுலா வர இருக்கின்றனர்.

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் நிகழ்வுகள் :

காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதியுலா வர இருக்கின்றனர்.

இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா நடைபெறும்.

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

திருவண்ணாமலை தீப திருவிழாக்கு மலை மேல் தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்!!

திருவண்ணாமலை தீப திருவிழாக்கு மலை மேல் தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய்!!

திருவண்ணாமலை: வரவிருக்கும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக மலை உச்சியில் ஏற்ற வேண்டிய 4,500 கிலோ நெய், நேற்று ஆவினில் கொள்முதல் செய்யப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் 21ம் தேதியான இன்று (21-11-2025) தொடங்கியது.

நவம்பர்.24ம் தேதி கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கப்பட உள்ளது. டிசம்பர்.3ல் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.