சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மே 14-ம் தேதி தரிசனத்திற்காக திறக்கப்படும்!!

மே 19-ம் தேதி வரை பக்தர்களின் தரிசனத்திற்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு இருக்கும். 19-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!

பி.எம் கிசான் திட்டம் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்!!

பிரதம மந்திரியின் கவுரவநிதி (பி.எம் கிசான்) திட்டத்தின் கீழ் தகுதி உடைய அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த வேளாண்மை மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் வருகிற 31-ம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் அறிவித்துள்ளார்.

சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் கூட்டம்!!

சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் கூட்டம்!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று அதிகாலை முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கிவிட்டார்கள். பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்து, கிரிவலமும் மேற்கொண்டனர். சித்ரா பவுர்ணமி இன்று இரவு 10.48 மணி வரையில் உள்ளதால் பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வருகிறார்கள்.

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டுகள் பி.ஏ., எல்.எல்.பி., படிப்பில் சேர விண்ணப்ப பதிவு தொடக்கம்; TNDALU.AC.IN என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம்!!

எல் ஐ சி யில் WHATSAPP மூலம் பிரீமியம் செலுத்தும் முறை அறிமுகம்!!

எல்ஐசிவாட்ஸ்அப் மூலம் பிரிமியம் செலுத்தும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பதிவு செய்த வாடிக்கையாளர்கள் 89768 62090 என்ற எண்ணை பயன்படுத்தி, பணம் செலுத்த வேண்டிய பாலிசிகளை அறிந்து, UPI அல்லது கார்டுகள் மூலம் நேரடியாக செலுத்தலாம்.