திருக்கார்த்திகை தீப திருவிழா - 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 17.11.2023) தொடங்கியது.

இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (26.11.2023) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *