திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த, 24 ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 03ம் தேதி, பஞ்ச பூதங்கள்,என்பதை விளக்கும் வகையில், அதிகாலை, 4:00 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
அண்ணாமலையாருக்கு அரோகரா! திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் (03.12.2025 ) மாலை 06.00 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது. “அரோகரா” முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசித்தனர்.


