சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு!

சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியீடு!

ஓரிரு நாட்களில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல். சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 44 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.முதலில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் அதை அடுத்து 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்படும்.

ஏ.டி.எம், கட்டணம் உயர்வு!!

ஏ.டி.எம், கட்டணம் உயர்வு!!

மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.,யில் பணம் எடுத்தால் சேவைக் கட்டணம் இன்று முதல் ரூ.23 வசூல்; 5 முறைக்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ.21 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.23 ஆக உயர்வு.

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!!

100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2,999 கோடி மட்டுமே விடுவித்துள்ளது!!

100 நாள் வேலை திட்டத்திற்கான நிலுவையில் உள்ள தொகையான ரூ.4,034 கோடியை விடுவிக்க தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், ரூ.2,999 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது.

கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!

கலசபாக்கம் தாசில்தாராக பொறுப்பேற்றார் திருமதி தேன்மொழி – நம் ஊரின் பெருமை!

கலசபாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களின் மகளான திருமதி தேன்மொழி அவர்கள், தற்போது கலசபாக்கம் தாலுகா தாசில்தாரராக பொறுப்பேற்று தங்கள் பணியை தொடங்கியுள்ளார்….நம் ஊரைச் சேர்ந்தவர் தற்போது தாசில்தாராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த பெருமையான நிகழ்வாகும்.

தமிழ்நாடு அரசின் குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று, படிப்படியாக மாநில அரசுத் துறையில் முன்னேறி வந்த இவர், தற்போது நம் பகுதியில் தாசில்தாராக பொறுப்பேற்று கொண்டது நம் பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vellorecity.com சார்பில், திருமதி தேன்மொழி அவர்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அவர் மக்களின் நலனுக்காக பல நன்மிகு திட்டங்களை மேற்கொண்டு, சிறப்பான நிர்வாக சேவைகளை வழங்கி, நம் ஊருக்கு மேலும் பெருமை சேர்க்கும் படியாக செயல்பட வாழ்த்துகிறோம்.

அவரது பெற்றோர்களான திரு ஆறுமுகம் மற்றும் திருமதி சகுந்தலா தம்பதியர்களுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி!

அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி புழுங்கல் அரிசி, உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரி இன்று முதல் அமல் உள்நாட்டில் அரிசி விலையை நிலைப்படுத்த, இருப்பு, விநியோகத்தை உறுதி செய்யும் வகையில் வரி.