பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு!

பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஒத்திவைப்பு. நாளை மாலை 4.12 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் இன்று முதல் ப்ரீபெய்டு டோலி சேவை!

சபரிமலையில் இன்று முதல் ப்ரீபெய்டு டோலி சேவை!

மலை ஏற சிரமப்படும் பக்தர்களை பம்பை, நீலிமலை, வலிய நடைப்பந்தல் ஆகிய இடங்களில் இருந்து 80 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல ரூ.4000/- கட்டணமாகவும், 80 முதல் 100 கிலோ எடை உள்ளவர்களை அழைத்துச் செல்ல கட்டணமாக ரூ.5,000/- நிர்ணயம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.

இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை ( 13.12.2024 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.